Wednesday, November 23, 2011

கார்த்திகையே

மழை சிந்தும்
கண்ணீர் துளியாகும்
கார்த்திகையே

கல்லறை துயிலும்
மறவர் கண்விழிக்கும்
கார்த்திகையே

விண் சுமக்கும் - பூமியில்
மண்சுமந்த வீரம் - மணக்கும்
கார்த்திகையே

மாவீரன் நினைவெங்கும்
அலங்கரிக்க மலர்சூடும்
கார்த்திகையே

சிவப்பு மஞ்சளாய் - ஈழம்
வண்ணமயம் கொண்ட
கார்த்திகையே

விடியலுக்காய்
புது செய்திதரும்
கார்த்திகையே

நிச்சயம்....
எம் தெய்வங்களின்
கோயில் - தொழுதிடுவோம்
கார்த்திகையே....

No comments: