Wednesday, November 23, 2011

கார்த்திகையே

மழை சிந்தும்
கண்ணீர் துளியாகும்
கார்த்திகையே

கல்லறை துயிலும்
மறவர் கண்விழிக்கும்
கார்த்திகையே

விண் சுமக்கும் - பூமியில்
மண்சுமந்த வீரம் - மணக்கும்
கார்த்திகையே

மாவீரன் நினைவெங்கும்
அலங்கரிக்க மலர்சூடும்
கார்த்திகையே

சிவப்பு மஞ்சளாய் - ஈழம்
வண்ணமயம் கொண்ட
கார்த்திகையே

விடியலுக்காய்
புது செய்திதரும்
கார்த்திகையே

நிச்சயம்....
எம் தெய்வங்களின்
கோயில் - தொழுதிடுவோம்
கார்த்திகையே....

Sunday, August 7, 2011

காதல்

காதல் ஒரு வித்தியாசமான கடல்.
அங்கு மட்டும் தான் மீன்கள்
சுறாவுக்கு தூண்டில் வீசும்.

காதல் ஒரு வித்தியாசமான காடு.
அங்கு மட்டும் தான் குயில்
கழுகுக்கு வலை விரிக்கும்.

தவறு

கன்னிவெடி பதுங்கி
இருப்பது என்னவோ,
உன் கண்களில் தான்...
ஆனால் வெடித்துச் சிதறுவது
என் நெஞ்சம் ஏன்?

Monday, July 25, 2011

காதலின் மகத்துவம்

இதய மாற்று சிகிச்சையை
இங்கு கண்டெடுத்தது
சில ஆண்டுகளுக்கு முன்னே.
அடே மனிதா, இவ் சிகிச்சையைகாதல்

அன்றே அறிந்து விட்டது
காதலியின் தங்கையை கண்டதும்.
இன்னும் நீ அறியவில்லையோ
காதலின் மகத்துவத்தை...

ஆன்மா

வெறும் கையோடு
உலகில் பிறந்தேன்
வெறும் காலோடு
உலக வாழ்வை நீத்தேன்

பிறப்பு, இறப்பு,
இந்த இரு நிகழ்வுகளுக்காக
மெய் உடலில்
சிக்கிக் கொண்டேன்

தாமரை இலை நீர் போல
உடலை விட்டு மறைந்து போனேன்

வாழ்கை

வாழ்வதற்கு ஆசை இல்லை
என்னக்கு வந்தாய்
துணையாக
புது உலகத்தை தந்தாய்
இன்று வாழ்கிறேன்
உன்னை யாரென்று
காணமல்!!!!!!

Wednesday, July 20, 2011

எங்கே நீ

ஒருவேளை இன்று நீ
ஊமையாகி போகலாம்
ஒரு நாள் என்னோடு
நீ பேச வருவாய்..

அன்று நான்
இங்கு உறங்கிகொண்டிருபேன்.
இன்று வந்து என் மார்பில்
சாய்ந்தால் உன்னை அணைக்க
என் கைகள் இருக்கும் இல்லையேல்
நீ அழும்போது உன் கண்ணீர்
துடைக்க கூட நான்.... ???