Tuesday, July 5, 2011

தொலைந்த இதயம் பேசுகிறது

நீர் இன்றி மீன் வாழும் என்றால்
உயிர் இன்றி உடலும் கூட வாழும் என்றால்
உன் நினைவு இன்றி நான் வாழ்வது
சில சமயம் சாத்தியம்தான்...

உயிர் அற்ற ஜீவனானது என் காதல்
உயிர் உள்ள உண்மை
உணர்வானது உன் நினைவுகள்...
கால் போன பாதையில் போன என்னை
காதல் எனும் பாதைக்கு இழுத்து
கண்ணீர் எனும்
கடலுக்குள் தள்ளிச்சென்றவளே
புது உறவோடு தொலைதூரம் நீ சென்றாலும்
தொலையாத நிம்மதியுடன் நீ வாழ
தொலைந்து போன என்
இதயத்தின் வாழ்த்துக்கள்.

No comments: