Wednesday, June 29, 2011

ஏக்கம்

ஏக்கம் அவள் வரவுக்காய் காத்திருக்கும்
ஓர் உயிருள்ள ஜீவன் நான்
அவளை பார்த்துவிடத் துடிக்கும் கண்கள்
அவள் பேச்சொலிக்காய் ஏங்கும் செவிகள்

அவளிடம் பேசிவிடத் துடிக்கும் உதடு
அவள் சுவாசித்த காற்றை
சுவாசிக்க நினைக்கும் இதயம்
அவளை தொட்டு விட நினைக்கும் விரல்கள்
அவளை கடந்து விட நினைக்கும் கால்கள்
அவள் உதடு பதிய ஏங்கும் கன்னம்
அவள் சுவடு பதிய ஏங்கும் இல்லம்
இவை யாவற்றிலும்
ஓர் உணர்வு கலந்த ஏக்கம்

No comments: