Sunday, June 19, 2011

உன் நினைவுப்பூக்கள்

உன் சிரிப்பு ஒன்றே போதுமடி
சில ஜென்மங்கள் நான் வாழ்ந்திட
என் இளமைக்காலத்தை இழுத்து இதயத்தினுள்
புதைத்தவளே
இனிதொரு காலம் வருமோ
இனிமையாக நாம் வாழ

என் இதயத்துடிப்பு உன் பெயர்
சொல்லி உன்னை அழைக்கிறது
என் நாடித்துடிப்போ உன் பார்வை
இன்றி மெல்ல மெல்ல குறைகிறது
வான் மலை இன்றி
என் ரோஜாவும் மண்ணில் வாட
வான் மதியே உன் துணை இன்றி
என் இதயமும் நெஞ்சோடு தேய்கிறது.

காதல் எனும் பூந்தோட்டத்தில்
உதிரத பூக்களாக உன் நினைவுகள்
காதல் தோட்டத்தை
பாதுகாக்கும் காவலனாக நான்
கண்மணியே கலக்கம் வேண்டாம்
என் காதல் தோட்டத்தில்
பூத்திருக்கும் உன் நினைவுப்பூக்களை
யாரும் பறிக்கவும் தரமாட்டேன்
மண்ணோடு உதிர்ந்து போகவும் விடமாட்டேன்
என் கண்ணீரை தண்ணீராக ஊற்றி
உன் நினைவுகளுக்கு உயிர் கொடுப்பேன்
என் உயிர் வாழும் வரை

காலம் ஒன்று வந்து நம் காதலை
கை தட்டி அழைக்கும் வரை
காத்திருப்போம் கனவுகளோடு...

No comments: