இருப்பதோ இரண்டு,
இதில் ஆச்சரியம் என்ன தெரியுமா?
இளகுவது மனம் என்பர் அறியாதோர்,
இளகியது அதனினும் நீயன்றோ,
இதயத்துக்கு இடம் தர வேண்டி,
இடதாகிய நீ வலதைக் காட்டிலும் சிரிதாமே?
இதயத்துக்கு இடம் தந்த இளகிய இட நுரையீரலே நீ வாழ்க,
இதயத்தை வாழ்வித்தாய் நீ - அதை வாழ்விப்பது காதல்,
இடர்கள் களைந்து காதல் வாழ்ந்திருக்கும் வரை,
இட நுரையீரலே நீயும் வாழ்ந்திருப்பாய்,
இதயத்தை நீ காதலிப்பது தெரிகிறது, வாழ்க உன் காதல்,
இனிதாய் சிறக்கட்டும் உறுப்புகளுக்குள் காதல், உறவுகளுக்குள் காதல்...
No comments:
Post a Comment