Thursday, June 23, 2011

கல்லறை காற்று

காலங்கள் கடந்த போதும்
கண்ணீர் துளி மரித்த போதும்
கடல் நீர் வற்றிய போதும்
கார் மேகம் தீர்ந்த போதும்

கனவுகள் கலைந்த போதும்
கவலைகள் சுமந்த போதும்
கஷ்டங்கள் நிறைந்த போதும்
கற்பனைகள் இறந்த போதும்

ஓடும் நதிகள் நின்ற போதும்
ஓயாத அலைகள் ஓய்ந்த போதும்
ஓவியங்கள் முடிந்த போதும்
ஓடும் உயிர்கள் உறைந்த போதும்

உறவுகள் ஊனமாகிய போதும்
உயிர் மூச்சு உறைந்த போதும்
உள்ளம் கொண்ட நட்பு மாறிப்போன போதும்
உண்மை அன்பு உதறிப்போன போதும்

இவை அனைத்தும் மாய்ந்து
மறைந்து போன போதும்
நீ என்னிடம் விட்டு சென்ற
உன் நினைவுகள் மாத்திரம் ஒரு போதும் மாயதம்மா

என் உயிர் வாழும் வரை என் இதய துடிப்பாக
உன் நினைவுகள் வாழும்
என் உயிர் பிரிந்த பிறகு என் கல்லறையை சுற்றி
உன் நினைவுகள் வாழ்ந்து கொண்டே இருக்கும்
என் கல்லறை காற்றாக...

No comments: