Sunday, June 19, 2011

கண்ணீர் தந்த காதலே! உனக்கு ஒரு நன்றி

நிலவு தூங்கும் நேரம் அது
உன் நினைவுகள் தூங்காத நெஞ்சம் இது
இதழ்கள் இல்லாத மலர் எது
நீ கொண்ட மனம் அது
நான் உணர்ந்த சுவர்க்கம் எது
உன்னோடு வாழ்ந்த நொடிகள் அது .....

வாழ்வோடு வந்த வசந்தம் நீ"
வாலிபத்தை வருத்தும் வலியும் நீ"
கண்ணோடு வாழ்ந்த கனவும் நீ "
கல்லறையை காட்டும் வழியும் நீ"
சொல்ல மறந்த சொந்தமும் நீ"
சொல்ல முடியாத சோகமும் நீ "

வார்த்தைகள் வீசிய உன் உள்ளத்துக்கு ஒரு நன்றி
வாழ மறுக்கும் என் இதயத்துக்கு ஒரு நன்றி
மறந்து போன உன் மனதுக்கு ஒரு நன்றி
மாலை சூடிய உன் கணவனுக்கு ஒரு நன்றி
காத்திருக்கும் என் கல்லறைக்கு ஒரு நன்றி
கண்ணீர் தந்த காதலே !உனக்கு ஒரு நன்றி ......

காதலே நீ தந்த கண்ணீர் போதும்
மறு ஜென்மம் ஒன்று இருந்தால்
மறுபடியும் உன்னை சந்திக்கிறேன்
இப்போதைக்கு வழி தந்துவிடு என்னவளை
தொலைத்த என் இதயம் கல்லறை செல்ல வேண்டும் .

No comments: