Sunday, June 19, 2011

என்னிதயம் இக்கரையில் காதலுடன்

உயிரான வார்த்தை
உன் உதட்டில்
இருந்து விரிந்தால்
மட்டுமே
என் செவிக்கு
நம்பிக்கை
உண்டாகும்
அதுவரை
மன்னித்துக்கொள்

நீ தென்றல் காற்றை
தூதனுப்பி என்
உடல் ஊணமானது
போதும்
இதுக்கு மேல்
காயம் வர உடம்பில்
காயமில்லா
இடமே இல்லையடா

இன்னும் காதலுடன்
எவ்வளவு காலமென்றாலும்
என்னிதயம் காத்திருக்கும்
நீ மனம் மாறி காதலை
மீட்டெடுப்பாயோ
அறியாது என்னிதயம்

நம்ப வை உன்னிதயத்தை
தூதனுப்பி
அதே காதலுடன்
இக்கரையில் என்னிதயம்
காத்திருக்கு கண்ணீருடன்

No comments: