உயிரான வார்த்தை
உன் உதட்டில்
இருந்து விரிந்தால்
மட்டுமே
என் செவிக்கு
நம்பிக்கை
உண்டாகும்
அதுவரை
மன்னித்துக்கொள்
நீ தென்றல் காற்றை
தூதனுப்பி என்
உடல் ஊணமானது
போதும்
இதுக்கு மேல்
காயம் வர உடம்பில்
காயமில்லா
இடமே இல்லையடா
இன்னும் காதலுடன்
எவ்வளவு காலமென்றாலும்
என்னிதயம் காத்திருக்கும்
நீ மனம் மாறி காதலை
மீட்டெடுப்பாயோ
அறியாது என்னிதயம்
நம்ப வை உன்னிதயத்தை
தூதனுப்பி
அதே காதலுடன்
இக்கரையில் என்னிதயம்
காத்திருக்கு கண்ணீருடன்
No comments:
Post a Comment